மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோடு தான் நெருங்கிப் பழகிய பத்தாண்டுகள்
![](http://puratchikkavi.com/wp-content/uploads/2021/02/tamilanban.jpeg)
Event Description
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோடு தான் நெருங்கிப் பழகிய பத்தாண்டுகள் குறித்து எழுதிய பாராதிதாசனோடு பத்தாண்டுகள் புத்தகம் குறித்த திறனாய்வுக் கூட்டத்தை நடத்துவதில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றமும், அமெரிக்கத் தமிழ் ஊடகமும் பெருமகிழ்ச்சி கொள்கிறது. அமெரிக்காவில் இருக்கும் சிறந்த தமிழ் ஆளுமைகள் இப்புத்தகம் குறித்து பேசவுள்ளார்கள் (முகநூல் நிகழ்வில் கொடுக்கப்பட்ட துண்டறிக்கை பார்க்கவும்).
பாரதிதாசன் குறித்த அறிய தகவல்களை அறிந்து கொள்ளவும், மகாகவி அவர்களின் பங்களிப்பையும், தமிழ்ப் பணியையும் போற்றிடவும், பேச்சாளர்களை ஊக்கப்படுத்தவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்துத் தர அனைவரையும் அருள்கூர்ந்து வேண்டுகிறோம்.
இதனை உங்கள் நட்பு வட்டத்தில் பரப்பவும்
நாள் / நேரம்:
பசிபிக் நேரம் – பிப்ரவரி 13, சனிக்கிழமை காலை 7:00 மணி
கிழக்கு நேரம் – பிப்ரவரி 13, சனிக்கிழமை காலை 10:00 மணி
இந்திய நேரம் – பிப்ரவரி 13, சனிக்கிழமை, இரவு 8:30 மணி
நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்